ஸ்டார்ட் கேமரா ஆக்சன்; இயக்குநர் ஐஸ்வர்யா ராய்?!

 

ஸ்டார்ட் கேமரா ஆக்சன்; இயக்குநர் ஐஸ்வர்யா ராய்?!

தமிழில் ‘இருவர்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவர் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘ஃபேனி கான்’ படத்தில் பாடகியாக நடித்திருந்தார்.

இந்திய சினிமா ஆளுமைகளில் முக்கியமானவர் ஐஸ்வர்யா ராய், நீண்டகாலமாக திரைத்துறையில் இயங்கி வருகிறார். தமிழில் ‘இருவர்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவர் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘ஃபேனி கான்’ படத்தில் பாடகியாக நடித்திருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் ஒரு திரைப்படம் இயக்க ஆசை இருப்பதாய் தெரிவித்துள்ளார்.

aish

தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ஐஸ்வர்யா ராயிடம் திரைப்படம் தயாரிப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், இப்போது பலரும் தயாரிப்பு பணியில் இறங்கிவிட்டார்கள், எனக்கும் அதில் ஆர்வமுண்டு. எல்லோரிடமும் அதுபற்றி கருத்து கேட்டிருக்கிறேன், அது உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. வெகுவிரைவில் ஒரு திரைப்படத்தை தயாரிப்பேன் என்றார்.

aish

மேலும் அவரிடம் திரைப்படம் இயக்க ஆசை இருக்கிறதா என கேல்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர், நிச்சயமாக திரைப்படம் இயக்கும் ஆசை உள்ளது. என்றாவது இயக்குநராக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

hjashj

என் நண்பர்கள் என்னிடம், நீ தயாரிப்பாளர் அல்லது இயக்குநராகி உன் சொந்த படத்தை ஏன் எடுக்கக்கூடாது என அவ்வப்போது கேட்டிருக்கிறார்கள். இப்பொழுதுதான் அதுபற்றி சிந்திப்பதற்கான நேரம் கிடைத்துள்ளது தெரிவித்துள்ளார். வெகு விரைவில் ஐஸ்வர்யா ராய் ஸ்டார்ட் கேமரா ஆக்சன் சொல்லப்போகிறார்.

 

இதையும் படிங்க: ஹேய் ரவுடி; விஜய் தேவரகொண்டா புகைப்படத்தை பதிவிட்டு இயக்குனரை வம்பிழுத்த கியாரா