ஸ்கூலுக்கு லேட்.. மாணவர்களை நிர்வாணமாக்கிய ஆசிரியர்கள்.. நடந்தது என்ன?
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களின் ஆடைகள் உருவப்பட்டு, வெயிலில் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களின் ஆடைகள் உருவப்பட்டு, வெயிலில் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள புங்கனூர் பகுதியில், சைதன்யா பாரதி என்ற பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களில் 4 பேர் இன்று காலை, பள்ளிக்கு சற்று தாமதமாக வந்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவர்கள் 4 பேரையும், சற்றும் ஈவு இரக்கமின்றி, ஆடைகளை நீக்கிவிட்டு பள்ளி மைதானத்தில் நிற்க வைத்துள்ளார். ஆடைகள் ஏதும் இன்றி, மொட்டை வெயிலில் மாணவர்கள் நின்றிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியே சென்ற மக்கள், அதை புகைப்படமாக பதிவு செய்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
Video- shocking punishment by a private school In Chittoor #AndhraPradesh, minor students were forced to stand necked as they came late to the school. Child right activists demand criminal action on managment. pic.twitter.com/ZypPD4d7vt
— Aashish (@Ashi_IndiaToday) December 27, 2018
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சித்தூர் மாவட்ட கல்வி அதிகாரிக்கும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாணவர்களை சித்ரவதை செய்த பள்ளியின் உரிமையை ரத்து செய்துவிட்டதாக மாவட்ட கல்வி அதிகாரி தற்போது தெரிவித்துள்ளார்.
Andhra Pradesh- Chittoor DEO tells me that investigation is underway on the incident where students were punished and made to stand naked in Chaithanya Bharathi School, Punganur. DEO says recognition of school for 2019-2020 could be withdrawn. #AndhraPradesh @CRYINDIA #POCSO pic.twitter.com/BRDgQL1qWw
— Rishika Sadam (@RishikaSadam) December 27, 2018
மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதும், இந்த செயலுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.