“ஸ்கூலுக்கு போற என் பொண்ண ஏன் கிண்டல் பண்றே” கோபத்தில் வெடித்த தந்தை -காலை ஒடித்த வாலிபர்… 

 

“ஸ்கூலுக்கு போற என் பொண்ண ஏன் கிண்டல் பண்றே” கோபத்தில் வெடித்த தந்தை -காலை ஒடித்த வாலிபர்… 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜீவன் பீமா நகரில் ஏழாம் வகுப்பில் ஒரு மாணவி அருகிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு போகும்போதும் வரும்போதும் மணி என்ற வாலிபர் தன்னுடைய நண்பர்கள் சிலரோடு சேர்ந்து கொண்

பெங்களூருவில் ஜீவன் பீமா நகரில் 35 வயதான ரமேஷ் என்பவரின் மகளை மணி என்ற வாலிபர் ஈவ் டீசிங் செய்ததை தட்டிக்கேட்ட தந்தை அந்த வாலிபரால் தாக்கப்பட்டார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜீவன் பீமா நகரில் ஏழாம் வகுப்பில் ஒரு மாணவி அருகிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு போகும்போதும் வரும்போதும் மணி என்ற வாலிபர் தன்னுடைய நண்பர்கள் சிலரோடு சேர்ந்து கொண்டு அப்பெண்ணை கேலியும் ,கிண்டலும் செய்துள்ளார் .இதனால் மனமுடைந்த மாணவி இது பற்றி தனது தாய் காயத்ரியிடம் கூறினார்.
பிறகு காயத்ரி இந்த விஷயத்தினை தனது கணவர் ரமேஷிடம் கூறினார். இதனால் ஆத்திரமுற்ற ரமேஷ் மார்ச் 11 ம் தேதி இரவு 8 மணிக்கு ஈவ் டீசிங் செய்த மணியின் வீட்டுக்கு சென்று அவரின் பெற்றோர்கள் முன்னிலையில் கேட்டார். அதற்கு அவர்கள் எதுவும் பேசாத நிலையில் வாலிபர் மணி ஒரு கட்டையை எடுத்து ரமேஷை தாக்கினார் .இதனால் அவரின் காலில் நரம்புகள் துண்டாக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யவேண்டிய அளவுக்கு காயமேற்பட்டுள்ளது. இதனால் அவர் அந்த வாலிபர் மீது போலீசில் புகார் தந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.