ஷாப்பிங் மாலில் சல்லாபம் -பெண் தரகரும் ,இளம் பெண்களும்-சிக்கிய முக்கிய புள்ளி..
நாக்பூரில் ஜெயந்தி நகரி-வி என்ற இடத்தில் அமைந்துள்ள கே-செரா-செரா ஷாப்பிங் மாலில் உள்ள அழகு நிலையத்தில் நகர காவல்துறை ரெய்டு நடத்தியது. அப்போது ஒரு பெண் தரகர் பாலியல் தொழில் நடத்துவதை கண்டுபிடித்து ,அந்த பெண் கைது செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டபெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.
நாக்பூரில் ஜெயந்தி நகரி-வி என்ற இடத்தில் அமைந்துள்ள கே-செரா-செரா ஷாப்பிங் மாலில் உள்ள அழகு நிலையத்தில் நகர காவல்துறை ரெய்டு நடத்தியது. அப்போது ஒரு பெண் தரகர் பாலியல் தொழில் நடத்துவதை கண்டுபிடித்து ,அந்த பெண் கைது செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டபெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.
மனிஷா துக்காரம் கர்தே என்ற பெண் விபச்சார ஏஜெண்டாக செயல்பட்டு பலான தொழில் நடத்துவதாக போலீசுக்கு கிடைத்த தகவலையடுத்து , போலீசார் ஒரு போலியான வாடிக்கையாளரை அனுப்பினர், அவர் மூலம் அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானவுடன், ஷாப்பிங் மாலில் உள்ள கார்ஜியஸ் அழகு நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர். போலீசின் ரெய்டுக்கு பிறகு மனிஷா கர்தேவை கைது செய்ததோடு, விபச்சாரத்தில் தள்ளப்பட்ட ஒரு இளம் பெண்ணும் ,ஒரு முக்கிய வாடிக்கையாளரும் சிக்கினர் .
பெல்டாரோடி காவல் நிலையத்தில் அவர் மீது ஒழுக்கக்கேடான கடத்தல் தடுப்புச் சட்டத்தின் 3, 4, 5, 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.