ஷங்கர்-இளையராஜா கூட்டணி சேராததுக்கு நான்தான் காரணம்! பிரபல டெக்னீஷியன் ஒப்புதல் வாக்குமூலம்!

 

ஷங்கர்-இளையராஜா கூட்டணி சேராததுக்கு நான்தான் காரணம்! பிரபல டெக்னீஷியன் ஒப்புதல் வாக்குமூலம்!

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக ‘இளையராஜா -75’ கடந்த மாதம் நடந்தது நினைவிருக்கலாம். அப்போது நடந்த அந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதைப் பார்த்த ஆட்கள் இளையராஜா மேடையில் அநாகரிகமாக நடந்து கொண்டார் என்று ஒரு குரூப் திட்டியும் இன்னும் சிலர் இளையராஜாவுக்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக ‘இளையராஜா -75’ கடந்த மாதம் நடந்தது நினைவிருக்கலாம். அப்போது நடந்த அந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதைப் பார்த்த ஆட்கள் இளையராஜா மேடையில் அநாகரிகமாக நடந்து கொண்டார் என்று ஒரு குரூப் திட்டியும் இன்னும் சிலர் இளையராஜாவுக்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி இயக்குனர் சங்கரிடம் ‘நீங்கள் இருவரும் சேர்ந்து பங்காற்றும் படத்தினை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,அது எப்போது நடக்கும் !? என்று கேட்டதுக்கு எனக்கு நீ சான்ஸ் கேட்கிறயா என்று மேடையிலேயே ரோகிணியை கண்டித்தார்.

shankar

 ஷங்கர் முதல் படமான ஜென்டில் மேன் படம் பண்ணும் காலத்தில் இளையராஜா பீக்கின் உச்சத்தில் இருந்தார்.நிச்சயம் புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பு தருவாரா என்று தெரியாத சூழல். ஆனாலும் இளையராஜாதான் தனது படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.

அதற்காக இளையராஜாவைப் போலவே பீக்கில்  இருந்த புகைப்பட கலைஞர் ஸ்டில்ஸ் ரவியைப் பார்த்து,ராஜா சாரை  மீட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். சரி என்று ஒப்புக்கொண்ட ஸ்டில்ஸ் ரவி,அடுத்தநாள் வேறொரு படத்திற்காக அவுட்டோர் கிளம்பிப் போய்விட்டாராம். படப்பிடிப்பு முடிந்து வந்து வந்து பார்த்தால்,தயாரிப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்துவிட்டார் என்று தகவல் சொல்லியிருக்கிறார் ஷங்கர்.

ilayaraja

அதன் பிறகு ரஹ்மான்-ஷங்கர் காம்போ ஹிட்டடிச்சதால் அப்படியே ட்ராவல் ஆகிட்டார் ஷங்கர். இளையராஜா நிகழ்ச்சியின் மூலம் இந்த தகவல் தெரிந்த ஸ்டில்ஸ் ரவி, இருவரும் சேராமல் போனதுக்கு நான்தான் காரணம் என்று நேர்மையாக உண்மையை உடைத்திருக்கிறார்.

பஞ்சாயத்து முடிஞ்சிருச்சு எல்லாரும் கிளம்புங்க!