வைரமுத்துவிற்கு வாய்ப்பளிக்க வேண்டும்: குஷ்பூ ஆதரவு

 

வைரமுத்துவிற்கு வாய்ப்பளிக்க வேண்டும்: குஷ்பூ ஆதரவு

மீ டு விவகாரத்தில் வைரமுத்து விளக்கமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ கூறியுள்ளார்.

சென்னை: மீ டு விவகாரத்தில் வைரமுத்து விளக்கமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ கூறியுள்ளார்.

பிரபல பாடலாசிரியர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி #Metoo என்ற ஹேஷ்டேக் மூலம் குற்றச்சாட்டினை வைத்தார். அவரது குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சின்மயி வைத்திருக்கும் குற்றச்சாட்டினை கவிஞர் வைரமுத்து மறுத்துள்ளார்.

இந்நிலையில், நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போது, மீ டூ இயக்கம் தேவைதான். வைரமுத்து பற்றி சின்மயி புகார் கூறியுள்ளார். ஆனால், அதேசமயம், வைரமுத்துவிற்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறினார்.