வைபவ் படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த செயல்!

 

வைபவ் படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த செயல்!

நடிகர் சிவகார்த்திகேயன் வைபவ் படத்திற்காக ஒரு புதிய பாடல் ஒன்றைப் பாடிக் கொடுத்துள்ளார். 

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் வைபவ் படத்திற்காக ஒரு புதிய பாடல் ஒன்றைப் பாடிக் கொடுத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் படிப்படியாக வளர்ந்து வந்த நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்று பன்முகம் கொண்ட இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இவர் நடித்த படங்களில்,  சில படங்களை தோல்வியைத் தழுவினாலும் அவர் பாடிய படங்கள் அனைத்துமே ஹிட் கொடுத்துள்ளது. 

இந்த நிலையில் இவர் தற்போது ஜிப்ரான் இசையமைத்து வரும் ‘சிக்ஸர்’ என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். இது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘சிக்ஸர் படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ஒன்றை ரெக்கார்ட் செய்தோம். மிக அருமையாக இந்த பாடலை பாடிக்கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு மிக்க நன்றி’ என்று கூறியுள்ளார். 

இயக்குநர் சாச்சி இயக்கி வரும் இப்படத்தில் வைபவ் ரெட்டி, பல்லாக் லால்வானி, சதீஷ், ராதா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.