வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை: தமிழிசை காட்டம்

 

வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை: தமிழிசை காட்டம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை கழுதையுடன் ஒப்பிட்டு விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை கழுதையுடன் ஒப்பிட்டு விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழிசையிடம், மோடியின் நலத் திட்டங்கள் எல்லாம் உங்களுக்கு மட்டும்தான் தெரிகிறது. தமிழக மக்களுக்கு தெரியவில்லையே, ஒவ்வொரு முறையும் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துகிறார்கள் என பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு தமிழிசை, தமிழக மக்களுக்கு தெரிகிறது, வைகோவுக்கு தெரியவில்லை. எதுக்கோ கற்பூர வாசனை தெரியவில்லை என்று சொல்வார்களே அதுபோலதான் என தெரிவித்தார்.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்றுதான் சொல்வார்கள், வைகோவை கழுதையுடன் ஒப்பிட்டு தமிழிசை பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தமிழிசையை விமர்சனம் செய்து வருகின்றனர்.