வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் ஜனவரி-6 திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை !

 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் ஜனவரி-6 திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை !

108 வைணவத் திருத்தலங்களில்  முதன்மையானதும்  பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று தொடங்கியது. 

ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் போது சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் திறக்கப்படும். இதனைக் காண ஏராளாமான பக்தர்கள் திரள்வார்கள். அதே போல, இந்த ஆண்டும் வரும் ஜனவரி 6 ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 108 வைணவத் திருத்தலங்களில்  முதன்மையானதும்  பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று தொடங்கியது. 

ttn

இதன் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால் திருச்சி மாவட்டத்திற்கு அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். அந்த விடுமுறைக்கு பதிலாக வரும் ஜனவரி 25 ஆம் தேதி வேலை நாளாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 
.