வேலைக்கு போகும் மனைவி -வீட்டிலிருக்கும் கணவன் -மன உளைச்சலால் குழந்தைகளை கொன்ற கொடுமை …

 

வேலைக்கு போகும் மனைவி -வீட்டிலிருக்கும் கணவன் -மன உளைச்சலால் குழந்தைகளை கொன்ற கொடுமை …

பெங்களூருவில்  ஹுலிமாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தனது மகள்களான மூன்று வயது தவுசினி மற்றும், 18 மாத சாஸ்தாவோடு ஜதின் குமாரும் அவரது மனைவி லட்சுமி சங்கரியும் வசித்து வந்தனர்.nலட்சுமி சங்கரி  எலெக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்தார்

பெங்களூருவில்  ஹுலிமாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தனது மகள்களான மூன்று வயது தவுசினி மற்றும், 18 மாத சாஸ்தாவோடு ஜதின் குமாரும் அவரது மனைவி லட்சுமி சங்கரியும் வசித்து வந்தனர்.nலட்சுமி சங்கரி  எலெக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்தார். ஆனால் ஜதின் குமார் பல இடங்களில் வேலை செய்து விட்டு அங்கிருந்து வெளியேறி இப்போது வேலையில்லாமல் இருக்கிறார் .அதனால் அவரின் மனைவியும், குழந்தைகளும் அவரை மதிப்பதில்லை என அவர் அடிக்கடி மனைவியோடு சண்டையிடுவார்.

husband wife fight

வெள்ளிக்கிழமையன்று அதே போல மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். பிறகு மனைவி வேலைக்கு போனதும்  அவர் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார் .மாலை வேலையிலிருந்து வந்த அவர் மனைவி குழந்தைகள் இறந்து கிடப்பதை கண்டு அருகிலுள்ளவர்களை அழைத்து ,போலீசில் புகார் தந்தார்.
போலீசார் விசாரணை நடத்தியதில் வீட்டுக்குள் ஒளிந்திருந்த அவரது கணவர் ஜதின் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால் அவரை கைது செய்தனர்.