வேலைக்கு சேர்ந்த 5வது நாளிலேயே முதலாளியை அடித்து கொன்ற வட இந்திய இளைஞர்கள்: அதிர வைக்கும் வாக்குமூலம்!

 

வேலைக்கு சேர்ந்த 5வது நாளிலேயே முதலாளியை அடித்து  கொன்ற வட இந்திய இளைஞர்கள்: அதிர வைக்கும் வாக்குமூலம்!

 ஒரு லட்ச ரூபாய், செல்போன் ஆகியவற்றை எடுத்து கொண்டு ஓடிவிட்டோம்’ என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். அ.தி.மு.க.பிரமுகரான இவருக்கு சொந்தமாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மோல்டிங் செய்யும் கம்பெனி ஒன்று உள்ளது. இதை ஆனந்தன் மகன் பிரபாகரன் நடத்தி வந்தார்.  கடந்த வாரம் பிரபாகரன் மோல்டிங்  கம்பெனியில் சடலமாக இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசுக்கு தகவல்  கொடுக்கப்பட்ட நிலையில் பிரபாகரன் சடலத்தை கைப்பற்றிய போலீசார்  பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார் அங்கிருந்த சிசிடிசி காட்சிகளை ஆராய்வு செய்ததில் கொலை நடந்ததன்று வடமாநில இளைஞர்கள் ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. 

ttn

இதையடுத்து தனிப்படை அமைத்த போலீசார், தப்பி சென்ற இருவரையும், பீகார் சென்று கைது செய்தனர். இதில் 17 வயதான ரோஷன் என்பவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், பிரபாகரனிடம் வேலைக்கு  சேர்ந்த 5 வது  நாளில் செலவுக்கு பணம் கேட்டோம். அவர்கள் கொடுக்கவில்லை. இதனால் இரும்பு கம்பியால் அடித்து கொன்றுவிட்டோம். அத்துடன் அவர் சட்டை பையிலிருந்த 1500 ரூபாய், லாக்கரில் இருந்த  ஒரு லட்ச ரூபாய், செல்போன் ஆகியவற்றை எடுத்து கொண்டு ஓடிவிட்டோம்’ என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

ttn

முன்பின் தெரியாத புதிய நபர்களை வேலைக்கு பணியமர்த்தும் முன், அவர்கள் காவல்துறையால் நன்னடத்தை சான்றிதழ் வாங்கியவர்களா? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். குறைந்த  சம்பளத்திற்கு வேலை செய்ய ஒப்புக்கொள்வதால் எந்தவித விவரமும் அறியாமல் வேலையில்  சேர்த்துக்கொள்வதன் விளைவு இப்படி ஆபத்தில் தான் முடியும் என்று போலீசார் எச்சரிக்கை விடுகின்றனர்.