வேலூர் மக்களவையில் யார் ஜெயிப்பாங்க? நாளை ரிசல்ட்

 

வேலூர் மக்களவையில் யார் ஜெயிப்பாங்க? நாளை ரிசல்ட்

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, வேலூரில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குவதாகவும், முன்னணி நிலவரங்கள் காலை 10 மணி முதலே வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

வேலூர் மக்களவையில் யார் ஜெயிப்பாங்க? நாளை ரிசல்ட்

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, வேலூரில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குவதாகவும், முன்னணி நிலவரங்கள் காலை 10 மணி முதலே வெளியாகும் என்றும் தெரிவித்தார். முதலில் தபால் வாக்குக்கள் எண்ணப்படும் என்று திரு.சத்ய பிரதா சாஹூ, சட்டமன்ற தொகுதிக்கு 5 ஒப்புகைசீட்டு இயந்திரம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கடைசியில் எண்ணப்படும் என்று கூறினார். 

satyabrata sahu

வேலூரில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பணியில் ஆயிரத்து 73 மாநில காவலர்கள் மற்றும் 100 துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.