வேலூர் கோட்டையின் சுடிதாருடன் அகழியில் கிடந்த சடலம்..கொலையா? தற்கொலையா? அதிர்ச்சி சம்பவம்!

 

வேலூர் கோட்டையின் சுடிதாருடன் அகழியில் கிடந்த சடலம்..கொலையா? தற்கொலையா? அதிர்ச்சி சம்பவம்!

வேலூர் கோட்டையிலிருந்த அகழி ஒன்றில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

கொரோனா பீதியால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டிருக்கின்றன. அதே போல, மக்கள் கூடும் மால், தியேட்டர் என அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதே போல வேலூர் கோட்டையும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலூர் கோட்டையிலிருந்த அகழி ஒன்றில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

ttn

விரைந்து சென்ற போலீசார் அந்த சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இறந்து கிடந்த அந்த நபர், சுடிதார் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்ததால் பெண்ணா? திருநங்கையா என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு அங்கே வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத அந்த சடலத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தால் தான் என்ன நடந்தது என்று தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.