வேலூர் அருகே திடீரென வானத்திலிருந்து விழுந்த மர்மப் பொருள்! 

 

வேலூர் அருகே திடீரென வானத்திலிருந்து விழுந்த மர்மப் பொருள்! 

வேலூரில் வானத்திலிருந்து திடீரென மர்மப்பொருள் ஒன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கே.வி. குப்பம் அடுத்த கவசம்பட்டு கிராமத்தில் வானத்தில் இருந்து விழுந்ததாக கூறப்படும் மர்ம பொருளில்,எல்இடி விளக்குகள் எரிந்து கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் கே.வி. குப்பம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்குவந்த கே.வி.குப்பம் போலீசார், மர்ம பொருளை கைப்பற்றி சோதனை நடத்தினர். அது வெடிபொருள் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மர்மப்பொருள்

இதையடுத்து அப்பொருளை சோதனையிட்ட தடவியல் வல்லுநர்கள் வானிலை ஆய்வு சம்பந்தப்பட்ட பொருள் எனக்கூறியுள்ளனர். மேலும் இந்த பொருள் எங்கிருந்து விழுந்தது, எப்படி விழுந்தது என்பன உள்ளிட்ட ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.