வேறுவழியில்லை நவம்பர் 13ம் தேதி வரை திஹார் சிறையில்தான் பொழுதை கழிக்கணும் ப.சிதம்பரம்! ஆனாலும் வீட்டு சாப்பாடு உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும்

 

வேறுவழியில்லை நவம்பர் 13ம் தேதி வரை திஹார் சிறையில்தான் பொழுதை கழிக்கணும் ப.சிதம்பரம்! ஆனாலும் வீட்டு சாப்பாடு உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை நவம்பர் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம், திஹார் சிறையில் அவருக்கு வீட்டு சாப்பாடு, மருந்து, தனி அறை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஐ.என்.எக்ஸ். மீடியா தொடர்பான ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை முடிவடைந்த பிறகு அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஐ.என்.எக்ஸ். மீடியா தொடர்பான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்தியது.

ஐ.என்.எக்ஸ். மீடியா

ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் கொடுத்த அனுமதி முடிவடைந்ததையடுத்து, நேற்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ப.சிதம்பரத்தை விசாரிக்க மேலும் ஒரு நாள் விசாரிக்க அமலாக்கத்துறை சார்பாக அமலாக்கப்பிரிவு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதற்கு நீதிமன்றம் மறுத்து விட்டது. 

ப.சிதம்பரம்

அதேசமயம், ப.சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. திஹார் சிறையில் அவருக்கு மருந்துகள், மேற்கத்திய கழிவறை, தனிச்சிறை, பாதுகாவலர்கள் மற்றும் வீட்டு சாப்பாடு வழங்கவும் சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆக, நவம்பர் 13ம் தேதி வரை ப.சிதம்பரம் திஹார் சிறையில்தான் பொழுதை கழிக்க வேண்டும்.