வேர்க்கடலைக்குள் வெளிநாட்டுப் பணம்…. அதிகாரிகளை வியக்கவைத்த நூதன கடத்தல்
வேர்கடலைக்குள் வெளிநாட்டுப் பணத்தை கடத்திவந்த முரட் ஆலம் என்ற பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து டெல்லி வந்த முரட் ஆலம் என்பவரது பையில் கிலோ கணக்கில் பச்சை வேர்க்கடலை வைத்திருந்தார். அத்துடன் இந்தியாவில் விற்பனையாகும் சாதரண பிஸ்கெட் பாக்கெட்டுகளையும் வைத்திருந்தார். வெளிநாட்டிலிருந்து வரும்போது இதையா? வாங்கிவருவார் என சந்தேகமடைந்த அதிகாரிகள் வேர்க் கடலை மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை உடைத்து சோதனை செய்தனர். அப்போது வேர்க்கடலைக்குள் வெளிநாட்டு பணம் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அதுபோல, பிஸ்கட்டு பாக்கெட்டுகளில் உள்ள பிஸ்கட்டுகளின் நடுவில் துளையிட்டு, அதில் பணம் மடக்கி வைக்கப்பட்டிருந்தது.
வேர்க்கடலைக்குள் வெளிநாட்டுப் பணம்…. அதிகாரிகளை வியக்கவைத்த நூதன கடத்தல் | #DelhiAirport | #Foreigncurrency pic.twitter.com/bR80drahoH
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 12, 2020
இதனை கண்டுபிடித்த அதிகாரிகள், முரட் ஆலமை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கடத்தப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.45 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.