வெளுத்து வாங்கும் மழை…பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
Nov 29, 2019, 07:20 IST1574992214000
லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள் மாவட்டங்களிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இதைத்தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்றிரவு முதலே பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில் கனமழை காரணமாகத் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவின் பேரில், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.