வெளுத்து வாங்கும் மழை…பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

 

வெளுத்து வாங்கும் மழை…பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள் மாவட்டங்களிலும், தென்  தமிழகத்தில் சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

rain

இதைத்தொடர்ந்து  தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  இன்று  முதல் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

rain

மேலும் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்றிரவு முதலே பரவலாக  மழை பெய்தது.

rain

இந்நிலையில்  கனமழை காரணமாகத் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர்களின்  உத்தரவின் பேரில், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.