வெளியே சுற்றிதிரிபவர்களை அரசு மருத்துவமனையில் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க மத்திய அரசு உத்தரவு!

 

வெளியே சுற்றிதிரிபவர்களை அரசு மருத்துவமனையில் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க மத்திய அரசு உத்தரவு!

சீனாவில் உருவான  கொரோனா வைரஸ் தற்போது 199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன

சீனாவில் உருவான  கொரோனா வைரஸ் தற்போது 199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000 ஐ நெருங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் 14 ஆம் தேதி வரை 21  நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு   வெளியில்  வர வேண்டாம் என போலீசார் கூறிவருகின்றனர். அதையும் மீறி சிலர் பைக்குகளில் சுற்றி வந்து கூடுதல் பணி சுமையை போலீசாருக்கு தருகிறார்கள். 

ஊரடங்கு உத்தரவு

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நகரங்களில் மக்கள் நடமாட்டத்தை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்டதேவைகளுக்கான ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டும். இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள், மாணவர்களை வெளியேற்றக்கூறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை காலி செய்ய வற்புறுத்த கூடாது. தங்கும் விடுதிகள் நடத்தும் விடுதிகளை எச்சரிக்க வேண்டும். தடையை மீறி வெளியே சுற்றுபவர்களை அரசு மருத்துவமனையில் 14 நாள் கண்காணிப்பில் வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.