வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்து சேலம் வந்தால் கொரோனா பரிசோதனை கட்டாயம்!

 

வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்து சேலம் வந்தால் கொரோனா பரிசோதனை கட்டாயம்!

அந்த வகையில், சேலம் மாநகர ஆணையர் புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழக அரசு பல்வேறு  கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது.  கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத வண்ணம் தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுனர்களுடன் அரசு ஆலோசனை மேற்கொண்டது. 

ttn

அதில், நகர்ப்புறங்களில் ஊரடங்கை கடுமையாக்கினால் தான் கொரோனவை தடுக்க முடியும் என்று முடிவெடுக்கப்பட்டதால், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் 28 ஆம் தேதி வரை ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. அதே போல, சேலம் மற்றும் திருப்பூரிலும் ஊரடங்கு கடுமைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க அந்தந்த மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி உத்தரவை பிறப்பித்து வருகின்றனர். அந்த வகையில், சேலம் மாநகர ஆணையர் புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளார். 

அதாவது, வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்து சேலம் வரும் நபர்களுக்கு  நாளை முதல் மாநகராட்சி எல்லையில்  கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்றும் அவர்களை கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை முடிவு வந்த பிறகே மாநகர எல்லைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார்.