வெளியாகவுள்ள படத்திற்காக பரபரப்பாக பேசி வருகிறார் ரஜினிகாந்த் – செல்லூர் ராஜூ

 

வெளியாகவுள்ள படத்திற்காக பரபரப்பாக பேசி வருகிறார் ரஜினிகாந்த் – செல்லூர் ராஜூ

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு தொடர்ந்து நீர் செல்வதற்காக யானைக்கல் லாலாசத்திரம் பகுதியில் உள்ள கால்வாயை தூர்வாரும் பணியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு தொடர்ந்து நீர் செல்வதற்காக யானைக்கல் லாலாசத்திரம் பகுதியில் உள்ள கால்வாயை தூர்வாரும் பணியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “வைகையின் தென்புறத்திலிருந்து பனையூர் கண்மாய்க்கு தண்ணீர் செல்வதற்கான கால்வாயை தூர்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 10 கோடியே 85 லட்சம் செலவில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வைகை வரை நீர் கொண்டுள்ளது. மதுரையில் ஸ்மார்ட்சிட்டி பணிகளால் மதுரை உயர்தர நகரமாக மாறி வருகிறது. தைப்பூச திருநாளான்று மாரியம்மன்  தெப்பத்தில் முழுமையாக தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

sellur raju

ரஜினிகாந்திற்கு இரண்டுபடம் வெளி வரவிருப்பதால் பரபரப்பாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தமிழகத்தில் தலைவருக்கான வெற்றிடத்தை எடப்பாடியார் நிரப்பிவிட்டார். அதற்கு துணையாக துணைமுதல்வர் உள்ளார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கை, மதசார்பற்ற தன்மையை காக்கும் அரசாக அதிமுக விளங்குகிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் தோழமை கட்சி உதவி இல்லாமல் வெற்றி பெற்றோம். மக்களின் ஆதரவால், சிறுபான்மை மக்களின் ஆதரவால் தான் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றோம்” என்றார்.