வெளிநாட்டு போலீசாரால் கைது செய்யப்படுகிறாரா திரிஷா!?
திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
சென்னை: திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவரான திரிஷா, பல வருடங்களாகத் தென்னிந்தியாவின் பிரபல கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் ஜானு கதாபாத்திரத்தின் மூலம் அனைவரது மனத்தையும் கொள்ளையடித்தார். இதனையடுத்து தற்போது எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குநர் சரவணன் இயக்கும் ‘ராங்கி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கான கதையை இயக்குநர் முருகதாஸ் எழுதியுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Here We Go!
The Intriguing and Thrilling #Raangi First Look! ?? @LycaProductions
Story @ARMurugadoss
Directed by @Saravanan16713
Music @CSathyaOfficial @venketramg#IntriguingRaangiFL #ShootInProgress pic.twitter.com/Sl9TuViDwf— Trish Krish (@trishtrashers) May 22, 2019
இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் இரண்டு வெளிநாட்டு போலீசார் திரிஷாவின் கையில் விலங்கு மாட்டுவது போல் உள்ளது. ரசிகர்கள் இப்போஸ்டரை கண்ட பின் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.