வெளிநாடுகளில் வசித்து வந்த 25 இந்தியர்கள் கொரோனாவால் பலி!

 

வெளிநாடுகளில் வசித்து வந்த 25 இந்தியர்கள் கொரோனாவால் பலி!

இதற்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலக நாடுகள் திணறி வருகின்றன. 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  16,05,548 ஆக உயர்ந்துள்ள நிலையில், 16,05,548 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் பரவிய இந்த வைரஸ் 180க்கும் மேற்பட்ட உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலக நாடுகள் திணறி வருகின்றன. 

ttn

இந்நிலையில் வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்த 25 இந்தியர்கள் கொரோனாவால் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, ஈரான், சுவீடன், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் தான் அவர்கள் 25 பேரும் வசித்து வந்தனர் என்றும் அதில் 11 பேர் அமெரிக்காவில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுவீடனில் வசித்து வந்த தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.