வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை!

 

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை!

புல்புல் புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்க கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில  நாட்களாக  சேந்தமங்கலம்,  ஓமலூர், செங்கம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

rain

இந்நிலையில்  வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

 

அதில் தமிழகத்தின் உள் மற்றும் தென் மாவட்டங்களில்  பரவலாக மழை பெய்யும் என்றும் சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவித்துள்ளது.

rain

இதனால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ள வானிலை மையம் ,  புல்புல் புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்க கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.