வீட்டு வேலை பணியாளர்கள் வேலைக்கு செல்லக்கூடாது: தமிழக அரசு

 

வீட்டு வேலை பணியாளர்கள் வேலைக்கு செல்லக்கூடாது: தமிழக அரசு

வீட்டு வேலைப் பணியாளர்கள் பாஸ் வாங்கி வேலைக்குச் செல்லலாம் என்ற அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு முடியும் வரை வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

வீட்டு வேலைப் பணியாளர்கள் பாஸ் வாங்கி வேலைக்குச் செல்லலாம் என்ற அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு முடியும் வரை வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவினை 04.05.2020 முதல் 17.05.2020 நள்ளிரவு 12.00 மணி வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்ததன் அடிப்படையில் 03.05.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் வீட்டு வேலைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணி புரிய அனுமதிக்கப்பட்டது.

statement

ஆனால், தற்போது பொதுநலன் கருதி, வீட்டு வேலைப் பணியாளர்களுக்கு பணிபுரிய வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. ஆகவே, வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் 17.05.2020 நள்ளிரவு ஊரடங்கு முடியும் வரை தாங்கள் பணிபுரியும் வீடுகளுக்குச் செல்லாமல் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.