வீட்டு உரிமையாளரை வெட்டிக் கொன்ற விசிக பிரமுகர்! | தலைவிரித்தாடும் வன்முறை சம்பவங்கள்

 

வீட்டு உரிமையாளரை வெட்டிக் கொன்ற விசிக பிரமுகர்! | தலைவிரித்தாடும் வன்முறை சம்பவங்கள்

தமிழகத்தில்  சரியான தலைமை இல்லை என்று அங்கொன்றும், இங்கொன்றுமாக கூக்குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தாலும், சமீப நாட்களாக வன்முறை சம்பவங்கள் தமிழகம் முழுக்கவே அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில்  சரியான தலைமை இல்லை என்று அங்கொன்றும், இங்கொன்றுமாக கூக்குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தாலும், சமீப நாட்களாக வன்முறை சம்பவங்கள் தமிழகம் முழுக்கவே அதிகரித்து வருகிறது.
ஏற்கெனவே டாஸ்மாக்  பிரச்சனைகளால், குடி போதையில் வாகனத்தில் செல்வோர் செய்கிற சேட்டைகளும், காவல் துறையினரிடம் குடி போதையில் கலாட்டா செய்யும் சம்பவங்களும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களாக பரவி வருகிறது.
இந்நிலையில், தங்கியிருக்கும் இடத்தை காலி செய்ய சொன்னதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர், உரிமையாளரை வெட்டி கொலைச் செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் சேகர்.  இவர் தனக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளராக இருந்த தனது நண்பர் புல்லட் மோகன் என்பவரை கடை வைத்துக் கொள்ள வாடகைக்கு விட்டுள்ளார். 
ஏற்கெனவே இருவரும் நண்பர்கள் என்பதால் கூட்டாக இணைந்து, அந்த பகுதியில் மணல் கடத்தல், மணல் வண்டி மாமூல் வசூல் என ஒன்றாக சேர்ந்து பல வேலைகளைச் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், வேலூர் தேர்தலில் இருவரும் சேர்ந்து ஒன்றாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

மோகன் சரிவர வாடகை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் வீட்டுடன் கூடிய கடையை காலி செய்ய கூறியுள்ளார் சேகர். இதற்கு மோகன், காலி செய்ய மறுத்ததுடன் மிரட்டலும் விடுத்துள்ளார்.  இதற்கிடையே இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில், புல்லட் மோகனை தீர்த்துக் கட்ட சேகர் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உஷாரான புல்லட் மோகன், திங்கட்கிழமை காலையில் சேகரை வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவானார். பின்னர், தனது வழக்கறிஞர் உதவியுடன், ஆரணி சார்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ரவுடி மோகன் மீது ஏற்கெனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.