வீட்டில் தீய சக்தி உள்ளதா… என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது..? எளிமையான வழி !

 

வீட்டில் தீய சக்தி உள்ளதா… என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது..? எளிமையான வழி !

‘நன்றாகத் தான் எங்களது குடும்பம் குதூகலமாக இருந்தது. திடீர் திடீரென எங்களுக்குள் சண்டை… குழந்தைகளிடம் எப்பொழுதுமே எரிந்து விழுகிறோம், அடிக்கடி வீட்டில் யாருக்காவது உடல் நலமில்லாமல் போய் விடுகிறது’ என்று மனக்கலக்கத்தில் இருக்கிறீர்களா? 

‘நன்றாகத் தான் எங்களது குடும்பம் குதூகலமாக இருந்தது. திடீர் திடீரென எங்களுக்குள் சண்டை… குழந்தைகளிடம் எப்பொழுதுமே எரிந்து விழுகிறோம், அடிக்கடி வீட்டில் யாருக்காவது உடல் நலமில்லாமல் போய் விடுகிறது’ என்று மனக்கலக்கத்தில் இருக்கிறீர்களா? 

bad enegy

பொதுவாக இது போன்ற காரணங்கள் திடீரென ஏற்பட்டால் நாம் வசிக்கின்ற வீட்டில் எதிர்மறையான சக்திகள் அதிகமிருக்கின்றன என்று பொருள். ஒருவரின் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைபாடுகள் ஏற்படும். சம்பந்தமே இல்லாமல் அதுவரையில் அன்பாக இருந்த உறவுகள், நேரெதிராக மாறுவார்கள். உறவுகளுக்கிடையே பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இது போன்ற சிக்கல்களில் சிக்கி இருப்பவர்கள், வசிக்கும் இடத்தில்  தீய சக்திகள் இருக்கின்றதா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

இதில் எந்த விதமான மந்திர சக்திகளும் கிடையாது.இதுவும் ஆன்மிகம் தான். நம்மைச் சுற்றி நல்ல சக்திகளை பரவ விட்டால் நம் வாழ்க்கை நிலை உயர்வடையும். தீய சக்திகளின் ஆதிக்கத்தில் நம் வசிப்பிடம் இருக்கின்றதா என்பதை சோதித்துப் பார்ப்பதற்கு எலுமிச்சைப் பழங்கள் மட்டும் போதும். 

lemon

ஒரு பீங்கான் கூடையில் 9 எலுமிச்சையை வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அப்படி கூடையில் வைக்கும் போது 8 எலுமிச்சைப் பழங்களை வைத்து, அதன் நடுவே ஒரு எலுமிச்சைப் பழத்தை வைக்கவும். இப்படி செய்தால், நமது வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.

நாம் அன்றாடம் வேலை செய்யும் இடம் அல்லது படிக்கும் இடங்களில் உள்ள மேஜையின் மீது 3 எலுமிச்சை பழத்தை  வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
மூன்று எலுமிச்சைப் பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி நமது வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைத்த பச்சை எலுமிச்சைப் பழங்கள் மஞ்சள் அல்லது கருப்பு நிறத்தில் மாறினால், அப்போது அதை தூக்கி எறிந்து விட்டு, அப்பகுதியில்  மீண்டும் புதிய பச்சை எலுமிச்சைப் பழங்களை வைக்க வேண்டும். 

lemon

எலுமிச்சைப் பழங்களுக்கு எதிர் மறையான சக்திகளையும், துர் சக்திகளையும் ஈர்க்கும் ஆற்றல் உண்டு. தூய்மையான மழை நீரில் எலுமிச்சை பழத்தின் தோலை கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் அனைத்தும் அகலும். கண்ணாடி கிண்ணத்தில் 3 எலுமிச்சையை வைத்து, வீட்டில் உள்ள மேஜையில் வைத்தால், உறவுகள் பலப்படும்.  தேவையற்ற வீண் சச்சரவுகள் ஏற்படாது. 

தினந்தோறும், வீட்டிலிருந்து வெளியேச் செல்லும் போது, ஒரு பச்சை எலுமிச்சையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, வெளியே சென்று வந்ததும் அந்த எலுமிச்சையை பார்க்கும் போது, அந்த எலுமிச்சை நன்கு காய்ந்திருந்தால், உங்களை நோக்கி அதிக எதிர்மறை ஆற்றல் வந்துள்ளது என்று அர்த்தமாகும்.

lemon

நமது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக அறுத்து, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்து, மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல், ஒரு  பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து போட்டு தூக்கி எறிந்து விட வேண்டும்.இப்படி செய்தீர்களானால், நமது வசிப்பிடத்தில் இருக்கின்ற துர் சக்திகளும், எதிர்மறை சக்திகளும் நம்மை விட்டு விலகிப் போய்விடும்.