வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாகக் கழுத்தை அறுத்து படுகொலை

 

வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாகக் கழுத்தை அறுத்து படுகொலை

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்

விருதுநகர்: வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி கனகவள்ளி (வயது50). இவர்களது மகன் அருணகிரி. இவருக்கு திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறார். பாலசுப்பிரமணியன் வேலைக்காக கேரளாவுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு உறவினர் செல்போன் மூலம் கனகவள்ளியை பாலகிருஷ்ணன் தொடர்பு கொள்ள முயன்றார். பல முறை முயன்றும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. உடனே பாலகிருஷ்ணன் அருணகிரியை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் கனகவள்ளி ஏன் செல்போன் அழைப்பை எடுத்து பேசவில்லை? என்பதை பார்ப்பதற்காக அருணகிரியும், பாலகிருஷ்ணனும் அங்கு சென்றனர்.

அப்போது வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கனகவள்ளி பிணமாக கிடந்தார். உடலில் சில இடங்களில் அரிவாள் வெட்டு அடையாளங்களும் இருந்தன. அதிர்ச்சி அடைந்த அருணகிரி உடனே அருப்புக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை நடத்தினர். கனகவள்ளி நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.