வீட்டிலிருந்தே வேலை செய்வதை ஊக்குவிக்க ஒரு மாத காலம் இலவச பிராட்பேண்ட் – பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

 

வீட்டிலிருந்தே வேலை செய்வதை ஊக்குவிக்க ஒரு மாத காலம் இலவச பிராட்பேண்ட் – பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

வீட்டிலிருந்தே வேலை செய்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மாத காலம் இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.

டெல்லி: வீட்டிலிருந்தே வேலை செய்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மாத காலம் இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தி உள்ளார்கள். #WorkFromHome என்ற ஹேஷ்டேக்கில் பல மீம்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படுகின்றன. ஆனால் வீட்டில் இருந்தே வேலை செய்வதில் இருக்கும் முக்கியமான நடைமுறை சிக்கல் வேகமான இன்டர்நெட் தான். அலுவலகங்களில் இருக்கும் அளவுக்கு மொபைல் இன்டர்நெட் வேகத்தை ஊழியர்கள் எதிர்பார்க்க முடியாது.

bsnl

இந்த நிலையில், வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என  பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய வாடிக்கையாளர்கள் மோடத்திற்கான தொகையை மட்டும் செலுத்தினால் போதும். நிறுவல் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு மாத பிராட்பேண்ட் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.