வீடு புகுந்து நகை திருடி உல்லாசமாக இருந்த காதல் ஜோடி!

 

வீடு புகுந்து நகை திருடி உல்லாசமாக இருந்த காதல் ஜோடி!

தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான குற்ற சம்பவங்களில் சிசிடிவி காமிராக்களில் பதிவாகும் வீடியோக்கள் போலீசாரும் பெரும் உதவியாய் இருக்கின்றன. அப்படி சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வீடு புகுந்து நகை திருடிய காதல் ஜோடியை சிசிடிவி கேமிராவின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான குற்ற சம்பவங்களில் சிசிடிவி காமிராக்களில் பதிவாகும் வீடியோக்கள் போலீசாரும் பெரும் உதவியாய் இருக்கின்றன. அப்படி சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வீடு புகுந்து நகை திருடிய காதல் ஜோடியை சிசிடிவி கேமிராவின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். வளசரவாக்கத்தை அடுத்துள்ள காரம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் தம்பதியர் ஜெகதீஸ் பாண்டியன், ரேவதி. இவர்கள், வீட்டில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகள் கடந்த 21ம் தேதி கொள்ளைப் போனதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

lovers

இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், அவர்கள் வீடு இருந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வாலிபர், காதலியுடன் ரேவதியின் வீட்டிற்கு வந்துச் செல்வது பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை ரேவதியிடம் காட்டியப் பொழுது, வீட்டிற்கு வந்துச் சென்ற வாலிபர் தங்களது உறவினரான கார்த்திக் (24) என்பதும், உடன் வந்த பெண், அவரது காதலி நித்யா என்பதும் தெரிய வந்தது. வழக்கமாக வீட்டைப் பூட்டி விட்டு, சாவியை வெளியே சுவர் ஓரமாக வைத்துச் செல்லும் ரேவதியின் நடவடிக்கையை அறிந்த கார்த்திக், ரேவதி வெளியில் சென்றதும், தன் காதலியுடன் வீட்டிற்கு வந்து நகையைத் திருடி சென்றிருக்கிறார்கள். போலீசாரின் விசாரணையில், இருவரும், என்ஜினீயரிங் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வந்ததும், காதலர்களான இவர்கள், இப்படி உறவினர் வீட்டில் நகையைத் திருடி உ ல்லாசமாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.