வீடு புகுந்து சாவி திருடி நகைக்கடையில் கொள்ளை.. 1 கிலோ தங்க நகைகள் அப்பேஸ்!

 

வீடு புகுந்து சாவி திருடி நகைக்கடையில் கொள்ளை.. 1 கிலோ தங்க நகைகள் அப்பேஸ்!

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த  55 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு அவர் நடத்திவரும் நகைக்கடையின் சாவியையும் எடுத்துச் சென்றுள்ளனர்

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு பகுதியில் வசித்து வருபவர் பொன்விஜய். இவர் மார்த்தாண்டத்தில் நகைக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இன்று அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த  55 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு அவர் நடத்திவரும் நகைக்கடையின் சாவியையும் எடுத்துச் சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து நேராக நகைக்கடைக்குச் சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த 1 கிலோ மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். 
 

ttn

காலையில் வீட்டில் நகை காணாமல் போயிருப்பதையும், கடையில் 1 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப் பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த  பொன்விஜய் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ttn

மேலும், அப்பகுதி மற்றும் கடையிலிருந்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி அந்த மர்ம நபர்களைப் பற்றி விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு இதே போல ஒரு கொள்ளை சம்பவம் நடந்த நிலையில் இன்று மீண்டும் கொள்ளை நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.