வீக் எண்ட் கலெக்ஷன்! ரூ. 150 கோடியை வசூல் செய்த தர்பார் – லைகா
உலகம் முழுவதும் வெளியான தர்பார் திரைப்படம் நான்கு நாட்களில் சுமார் 150 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன் விளக்கம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வெளியான தர்பார் திரைப்படம் நான்கு நாட்களில் சுமார் 150 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன் விளக்கம் அறிவித்துள்ளது.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக தமிழகத்தில் நேற்று வெளியானது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. 25 ஆண்டுகளுக்கு பின்னர் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடித்திருந்தது ரசிகர்களை பரவசப்படுத்தியது. வெளியீட்டுக்கு முன்னரே உலகளாவிய தியேட்டரிக்கல் மற்றும் நான் தியேட்டரிக்கல் உரிமத்தில், ரூ .200 கோடி கிளப்பில் ஏற்கனவே இணைந்துவிட்டது. இந்நிலையில் முதல்நாளில் மட்டும் தர்பார் படம் உலக அளவில் 100 கோடிக்கும் மேல் வசூலை பெற்று சாதனை படைத்தது. ஆனால் அதே நேரத்தில் தர்பார் வெளியான சில நிமிடங்களிலேயே தமிழ் ராக்கர்ஸில் வெளிவந்தது.
Here’s the Worldwide Box-office collections of #DARBAR
“Anyone can play the game, but the throne always belongs to the EMPEROR ?”@rajinikanth @ARMurugadoss #Nayanthara @anirudhofficial @santoshsivan @sreekar_prasad #Santhanam @SunielVShetty #DarbarPongal #DarbarBlockbuster pic.twitter.com/f2z0MGlzVv
— Lyca Productions (@LycaProductions) January 13, 2020
இந்நிலையில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளில் வெளியான தர்பார் வார இறுதிநாட்களில் அதாவது வெளியான 4 நாட்களில் ரூ.150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.