விஸ்வாசம் பாட்டு போட்டு, சாண்டியை கதறி அழ வைத்த பிக் பாஸ்! 

 

விஸ்வாசம் பாட்டு போட்டு, சாண்டியை கதறி அழ வைத்த பிக் பாஸ்! 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் வீட்டில் உள்ள அனைவரையும் சந்தோஷப் படுத்துபவர் சாண்டி மாஸ்டர்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் வீட்டில் உள்ள அனைவரையும் சந்தோஷப் படுத்துபவர் சாண்டி மாஸ்டர். எப்போதும் தனது நகைச்சுவை தன்மை மூலம் ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் மகிழ்விக்கும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இவர் நேற்று தனது பிறந்த நாளை பிக் பாஸ் வீட்டிற்குள் கொண்டாடியுள்ளார்.  திடீரென சாண்டிக்கு வாழ்த்துக் கூறி அவரது குழந்தையின் அழுகுரல் ரிங் டோன் ஒலிபரப்பப்பட்டது. இதைக் கேட்டு சாண்டி கண்ணீர் சிந்த ஆரம்பித்தார். மேலும் அவரது குழந்தையின் வீடியோ ஒன்றை கண்ணால கண்ணே பாடல் போட்டு ஒளிபரப்பட்டது. 

sandy

இதனைப் பார்த்து சாண்டி அன்பின் மிகுதியால், பிரிந்த குழந்தையை நினைத்துக் கதறி அழுகிறார். கூடவே வீட்டில் உள்ள அனைவரும் வருத்தம் அடைந்து கண்ணீர் சிந்துகின்றனர். அந்த காட்சி மிகவும் சென்சிடிவாக இருந்ததால் பார்த்து கொண்டு இருந்த ரசிகர்களையும் அழ வைத்துவிட்டது. பின்பு நிகழ்ச்சி முடிந்த ஒரு சில நிமிடங்கள் கழித்து ட்விட்டரில் #sandy என்ற ஹாஸ் டாக் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது.