விஸ்வாசம் சீட்டுக்கு மோதல்…. தல ரசிகர்களுக்கு விழுந்த கத்தி குத்து

 

விஸ்வாசம் சீட்டுக்கு மோதல்…. தல ரசிகர்களுக்கு விழுந்த கத்தி குத்து

வேலூரில் விஸ்வாசம் படத்தை திரையிடப்பட்ட தியேட்டரில் சீட் பிடிக்கும் தகராறில், அஜித் ரசிகர்ககள் இருவருக்கு கத்திகுத்து விழுந்தது

வேலூர்: வேலூரில் விஸ்வாசம் படத்தை திரையிடப்பட்ட தியேட்டரில் சீட் பிடிக்கும் தகராறில், அஜித் ரசிகர்ககள் இருவருக்கு கத்திகுத்து விழுந்தது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ’விஸ்வாசம்’ திரைப்படம் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அவரது ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அலங்கார்  திரையரங்கில், அஜித் ரசிகர்கள் நேற்றிரவு கட் அவுட், மேளதாளம், ஆட்டம் பாட்டம் என ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். 

ajith kumar

இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணிக்கு அலங்கார் திரையரங்கில் விஸ்வாசம் ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டது. ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு திரையரங்குக்குள் ஓடினர். அப்போது, சீட் பிடிப்பதில் ரசிகர்களுக்கிடையே மோதல் உருவானது. அப்போது அருகில் இருந்த 20 பேர் கொண்ட கும்பல், சீட் தர மறுத்து இரு அஜீத் ரசிகர்களை கத்தியால் சரமாரியாகத் குத்தினர்.

இதனால் நிலைகுலைந்த அவர்கள் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். வெட்டிய கும்பல் தப்பி ஓடி விட்டனர். திரையரங்குக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்..