விஷமான குளுக்கோஸ்! டாடா குளுக்கோ பிளஸ் குடித்து உயிருக்கு போராடும் பிரியாணிக் கடைக்காரர்! 

 

விஷமான குளுக்கோஸ்! டாடா குளுக்கோ பிளஸ் குடித்து உயிருக்கு போராடும் பிரியாணிக் கடைக்காரர்! 

சென்னை  வியாசர்பாடியை சேர்ந்த ஜாகீர் உசேன் உடல் சோர்வாக இருக்கு என்பதற்காக குளுக்கோ பிளஸ் குடித்துள்ளார். குடித்த சில மணி நேரங்களிலேயே அவர் மயங்கிவிழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை  வியாசர்பாடியை சேர்ந்த ஜாகீர் உசேன் உடல் சோர்வாக இருக்கு என்பதற்காக குளுக்கோ பிளஸ் குடித்துள்ளார். குடித்த சில மணி நேரங்களிலேயே அவர் மயங்கிவிழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன். திருமணமான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரியாணி  மாஸ்டராக வேலைப் பார்த்துவரும் இவர், அம்பேத்கர் கல்லூரி சாலை கள்ளுக்கடை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் டாடா நிறுவனத்தின் குளுக்கோ பிளஸை வாங்கிக் குடித்துள்ளார். மேலும் ஒரு பாக்கெட்டை வாங்கி குழந்தைகளுக்காக வீட்டிற்கு எடுத்துசென்றுள்ளார். வீட்டிற்கு சென்றவுடன் தான் தெரிந்தது அந்த குளுக்கோஸ் பாட்டில்  கெட்டுப் போயிருந்தது தெரியவந்தது. 

gluco plus

சிறிது நேரத்திலேயே ஜாகீர் வாந்தியெடுத்து மயங்கிவிழுந்தார். அவரை அவரது மனைவி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.