“விவாகரத்து ஆன நாள் எப்படியாவது கோர்ட்டுக்கு போகணும் தான் நினைச்சிட்டு இருந்தேன்” : உருக்கமாக பேசிய டிடி

 

“விவாகரத்து ஆன நாள் எப்படியாவது கோர்ட்டுக்கு போகணும் தான் நினைச்சிட்டு இருந்தேன்” : உருக்கமாக பேசிய டிடி

விருது வழங்கும் விழா என படுபிஸியாக சுற்றிக்கொண்டிருக்கும் இவர் இணையத்திலும் படுஆக்ட்டிவாக செயல்பட்டு வருகிறார்.

பிரபல டிவி தொகுப்பாளினியாக வலம்வருபவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. கடந்த 20 வருடங்களாக சின்னதிரையில் வலம்  வரும் டிடி  வெள்ளிதிரையிலும் நடித்து வருகிறார். இதுதவிர பல்வேறு மேடை நிகழ்ச்சியில், விருது வழங்கும் விழா என படுபிஸியாக சுற்றிக்கொண்டிருக்கும் இவர் இணையத்திலும் படுஆக்ட்டிவாக செயல்பட்டு வருகிறார்.

 

இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு டிடி தனது நீண்டகால நண்பரான  ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் கணவன் மனைவிக்குள் பரஸ்பர புரிதல் இல்லாததால் மனக்கசப்பு ஏற்பட்டது. அதேசமயம் டிடி  சினிமாவில் நடிப்பதற்குக் கணவர் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் கணவனை டிடி சில காலம் பிரிந்து வாழ்ந்து வந்ததோடு விவாகரத்தும் பெற்றார்.

 

இந்நிலையில் டிடி-யிடம் சமீபத்தில்  இணையதள  ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ‘வாழ்க்கையில் இரண்டு பேர் கிட்டயும் காதல் இருக்கனும். சில சமயங்களில் அது உடைஞ்சி கூட போகும். அந்த சமயத்துல சிலர் நம்மை ஆதரிப்பாங்க, சிலர் நம்மை கீழே தள்ளிவிடுவாங்க. அதையெல்லாம் தாண்டி முன்னேறணும். 
விவாகரத்து ஆன நாள் என் மனதில், எப்படியாவது கோர்ட்டுக்கு போகணும் அப்படிங்குற எண்ணம் மட்டும் தான் இருந்துச்சி. அதன் பிறகு இப்போது வரை பேசவில்லை, சந்திக்க கூட இல்லை. ஆனாலும் என் வாழ்க்கை ஓடிக்கிட்டு  தான் இருக்கு. கடவுளுக்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.