விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு: முதல்வர் அறிக்கை!

 

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு: முதல்வர் அறிக்கை!

அந்த சலுகைகள் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.   

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வருமானமின்றி ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல, விவசாயிகளும் அவர்கள் விளைவித்த பொருட்களை சந்தைக்கு அனுப்பி வைக்க முடியாமல் திணறி வருகின்றனர். அதனால் விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியிருந்தது. அந்த சலுகைகள் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.   

ttn

அதில், “தமிழகத்தில் குறைவு தாக்குதலை கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விலை பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சினைகளை கலைத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விளை பொருட்களை பாதுகாத்து சேமிப்பு கிடங்கு வசதி:
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பயன்பாட்டிற்காக நவீன சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு அவை பயன்பாட்டில் இருந்து வருகின்றன. விவசாயிகள் விளை பொருட்களை கிடங்குகளில் 180 நாட்கள் வரை வைத்து பாதுகாக்கலாம். அதிக விலைக்கு கிடைக்கப்பெறும் காலங்களில் விளைபொருட்களை கிடங்கில் இருந்து எடுத்து விற்பனை செய்திட கிடங்கு வாடகை கட்டணத்தை முதல் 30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை என மாண்புமிகு அம்மாவின் அரசு ஏற்கனவே ஆணையிட்டு இருந்தது. அது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுகிறது.

ttn

பொருளீட்டு கடன் வசதி:
கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களை அடமானத்தில் பேரில் அதிகபட்சம் 50 சதவீத சந்தை மதிப்பு அல்லது மூன்று லட்சம் ரூபாய் இவற்றில் எது குறைவோ அந்த அளவிற்கு பொருளீட்டு கடனை பெற்றிடலாம். கடல்நீர் கான கால அளவு 180 நாட்கள் ஆகும். இதற்கான வட்டி 5% ஆகும் கடனுக்கான வட்டி முதல் 30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை என ஆணையிட பட்டிருந்தது. அது மேலும் ஒரு மாத காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 

ttn

காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதன கிடங்கில் பாதுகாத்திட கட்டணம் முழுவதும் ரத்து: 
பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைத்திடவும் அவற்றை பாதுகாத்து தேவைப்படும் காலங்களில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குளிர்பதனக் கிடங்குகள் இயங்கி வருகின்றன. இக் கிடங்குகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைக்க விவசாயிகளிடமிருந்து பயன்பாட்டு கட்டணத் தொகையில் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் கருத்தில் கொண்டும் மேலும் 15 நாட்களில் மாம்பழம் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டண தொகை 30 4 2020 வரை வசூலிக்க படாது என்றும் இக்கட்டணத்தை முழுவதும் தமிழ்நாடு அரசு ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது இந்த சலுகை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

ttn

சந்தை கட்டண விலக்கு: 
தற்போது நெல் சிறு தானியங்கள் பயிர் வகைகள் நிலக்கடலை எள் தேங்காய் பருத்தி வெங்காயம் மிளகாய் புளி முந்திரி வெல்லம் மற்றும் சில மாவட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும்போது வியாபாரிகளிடமிருந்து விற்பனை மதிப்பில் ஒரு சதவீதம் சந்தை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது நிலவிவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளை பொருட்களை நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட ஏதுவாக தற்போது வியாபாரிகள் செலுத்தும் ஒரு சதவீத சந்தை கட்டணத்தை 30 நாள் 2020 வரை ரத்து செய்யப்பட்டு இருந்தது இந்த சலுகை மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.