விழுப்புரம் சிறுமி கொலைக்கு இரங்கல் தெரிவித்த ராமதாஸ்! – நெட்டிசன்கள் கண்டனம்

 

விழுப்புரம் சிறுமி கொலைக்கு இரங்கல் தெரிவித்த ராமதாஸ்! – நெட்டிசன்கள் கண்டனம்

விழுப்புரத்தில் முன்விரோதம் காரணமாக சிறுமி ஒருவரை அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் எரித்து கொலை செய்தார். தன்னை கொன்றது அ.தி.மு.க பிரமுகர்தான் என்று அந்த சிறுமி மரண வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

விழுப்புரத்தில் சிறுமி ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவிக்காமல் இரங்கல் மட்டும் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

villupuram-girl-murder

விழுப்புரத்தில் முன்விரோதம் காரணமாக சிறுமி ஒருவரை அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் எரித்து கொலை செய்தார். தன்னை கொன்றது அ.தி.மு.க பிரமுகர்தான் என்று அந்த சிறுமி மரண வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. பலரும் இந்த கொடூர செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், சிறுமி கொலைக்கு கண்டனம் தெரிவிக்காமல், சிறுமியின் மரணத்துக்கு டாக்டர் ராமதாஸ் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
ட்விட்டரில், “விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. இது கொடூரமான செயல். ஜெயஸ்ரீயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

ஆயிரம் முன்பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அது இத்தகைய கொடியவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்!” என்று கூறியுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “கொன்றவன் யார், அவன் பெயரைக் கூட சொல்லமாட்டீங்க… வாழ்க கூட்டணி தர்மம், தைரியம் இருந்தா அ.தி.மு.க என்று குறிப்பிடங்கள்” என்று பலரும் ராமதாசுக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.