விளக்கு ஏற்றினால் கொரோனா ஒழிந்து விடாது : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிரடி!

 

விளக்கு ஏற்றினால் கொரோனா ஒழிந்து விடாது : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிரடி!

இந்தியாவில் கொரோனாவால் 4,200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் 4,200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இருளில் மூழ்கியிருக்கும் நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் இரவு 9 மணி முதல் 9:09 மணி வரை மின்விளக்கை அனைத்து விட்டு, விளக்கு அல்லது டார்ச் ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதன் படி நேற்று இரவு நாடு முழுவதும் விளக்கு ஏற்றப்பட்டன.  அதே போல புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் விளக்கு ஏற்றினார். 

ttn

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விளக்கு ஏற்றுவதால் கொரோனா இந்தியாவை விட்டு சென்று விடாது. இருப்பினும், பிரதமருக்கு மரியாதை கொடுத்து விளக்கு ஏற்றினோம் என்று கூறினார். மேலும், பிரதமர் இப்போது சினிமா நடிகர்களிடமும் விளையாட்டு வீரர்களிடமும் பேசுவதை தவிர்த்து பொருளாதார மேதைகளிடம் பேசினால் இந்தியாவை கொரோனாவில் இருந்து எப்படி மீட்டெடுப்பது பற்றிய அவர்களின் அனுபவம் கண்டிப்பாக உதவும் என்றும் கூறினார்.