விளக்கு ஏத்துனா கொரோனா போயிடுமா?.. மோடியை ஆபாசமாக திட்டி வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது!

 

விளக்கு ஏத்துனா கொரோனா போயிடுமா?.. மோடியை ஆபாசமாக திட்டி வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது!

இரவு 9 மணி முதல் 9:09 மணி வரை மின்விளக்கை அனைத்து விட்டு, விளக்கு அல்லது டார்ச் ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் கொரோனாவால் 4,200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இருளில் மூழ்கியிருக்கும் நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் இரவு 9 மணி முதல் 9:09 மணி வரை மின்விளக்கை அனைத்து விட்டு, விளக்கு அல்லது டார்ச் ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதன் படி நேற்று இரவு நாடு முழுவதும் விளக்கு ஏற்றப்பட்டன. 

ttn

இதனிடையே பிரதமர் மோடியின் இந்த செயலை ஆதரித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள்  எழுந்தன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம்  பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள் விளக்கு ஏற்றினால் கொரோனா சாகுமா என்று கூறி மோடியை ஆபாச வார்த்தைகளில் பேசி வீடியோ வெளியிட்டனர். அந்த வீடியோ வைரல் ஆக, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்தனர். அதே போல கன்னியாகுமரி காவல் நிலையங்களிலும் புகார்கள் குவிந்தன. அந்த புகாரின் பேரில் 5 இளைஞர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.