வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்டவர் கைது! 

 

வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்டவர் கைது! 

கன்னியாகுமரியில் எஸ்.எஸ்.ஐ வில்சன்  கொலையில் மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். 

கன்னியாகுமரியில் எஸ்.எஸ்.ஐ வில்சன்  கொலையில் மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியாற்றி வந்த எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே அவரை சுட்டுக் கொன்ற நபர்களின் புகைப்படமும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. வெளியான சிசிடிவி காட்சிகள் மூலம், கர்நாடகா மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் அப்துல் சமீம், தஃவ்பீக் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட இருவரும், ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரியவந்தது. 

 SSI Wilson

இந்நிலையில் எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்ட மெகபூப் பாஷா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைதான அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த 3 பேர் தந்த தகவலின் பேரில் மெகபூப் பாஷாவை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.