விரைவில் மெட்ரோ பயண அட்டையை பயன்படுத்தி உணவு பொருட்கள் வாங்கலாம்!

 

விரைவில் மெட்ரோ பயண அட்டையை பயன்படுத்தி உணவு பொருட்கள் வாங்கலாம்!

சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டையைப் பயன்படுத்தி ரயில் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளிலிருந்து உணவு பண்டங்களை வாங்கி கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

விரைவில் மெட்ரோ பயண அட்டையை பயன்படுத்தி உணவு பொருட்கள் வாங்கலாம்!

சென்னை :சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டையைப் பயன்படுத்தி ரயில் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளிலிருந்து உணவு பண்டங்களை வாங்கி கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

போக்குவரத்து நெரிசல், விரைவு பயணம் என பல அம்சங்களை முன்னிறுத்தி அமைக்கப்பட்டது தான் சென்னை மெட்ரோ திட்டம். இதன் மூலம் பயணிகள் பலரும் நன்மையடைந்து வருகின்றனர். ரயிலில் பயணம் செய்ய ஏதுவாக  பயணிகளுக்குப் பயண அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மெட்ரோ பயண அட்டையைப் பயன்படுத்தி ரயில் நிலைய வளாகங்களிலுள்ள கடைகளில் பயணிகள் உணவு பொருட்களை வாங்கும் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. விரைவில் இந்தச் சேவை அமலுக்கு வர உள்ளது. 

இதே போல்  மெட்ரோ பயண அட்டை மூலமாக மட்டுமே இருசக்கர வாகன நிறுத்தத்திற்கு பார்க்கிங் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது. வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் இந்த திட்டத்தின் படி மெட்ரோ பயண அட்டை இல்லாதவர்கள் அதன் மையங்களில் அல்லது டிக்கெட் கவுண்டர்களிலோ இதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.