விருது நிகழ்ச்சியில் தீபிகா படுகோன் அணிந்திருந்த ஆடையின் விலை இவ்வளவா?

 

விருது நிகழ்ச்சியில் தீபிகா படுகோன் அணிந்திருந்த ஆடையின் விலை இவ்வளவா?

தனிமையை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.  இந்த நிகழ்ச்சியானது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. 

பாலிவுட்டில் முன்னணி  நடிகையாக வலம்வருபவர் நடிகை தீபிகா படுகோன். பெண்களை மையப்படுத்தி வரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் சமீபத்தில் ஆசிட் வீச்சால் பாதிப்புக்குள்ளான லக்‌ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வெளியான  சபாக் திரைப்படம் தீபிகாவை அடுத்த லெவலுக்கு அழைத்து சென்றுள்ளது. 

ttn

இதனிடையே மனநலம் குறித்த விழிப்புணர்வுக்கான சர்வதேச கிறிஸ்டல் விருது நடிகை தீபிகா படுகோனுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. வோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் தீபிகாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், மற்ற நோய்களை போல மனநல பாதிப்புக்கும் முறையான சிகிச்சை உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.  இந்த நிகழ்ச்சியானது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. 

ttn

இந்நிலையில் தீபிகா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பர்பிள் நிறத்தில் முழுநீள கவுன் ஒன்றை அணிந்து வந்திருந்தார். பார்ப்பதற்கு ஆடம்பரம் இல்லாமல், அதேசமயம் கிளாஸியாக இருந்தது. தற்போது அந்த கவுனின் விலை குறித்து பாலிவுட் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  

அதில், தீபிகா அணிந்திருந்த உடையின் விலை  ரூ. 2.26 லட்சமாம். இதை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் ஒருநிகழ்ச்சிக்கு இத்தனை  ரூபாய் செலவில் ஆடையா? என்று வியந்து போயுள்ளனர்.