வியட்நாம் அதிபர் உடல்நலக்குறைவால் காலமானார் – அந்நாட்டு மக்கள் சோகம்!

 

வியட்நாம் அதிபர் உடல்நலக்குறைவால் காலமானார் – அந்நாட்டு மக்கள் சோகம்!

வியட்நாம் நாட்டின் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

ஹனோய்: வியட்நாம் நாட்டின் அதிபர் ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

வியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் தீவிர உடல்நலக்குறைபாடு காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். முன்னதாக அவர் உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் வியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் காலமானார்.

61 வயதான அதிபர் ட்ரான் டாய் குவாங் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் வியட்நாமின் அதிபராக பதவி வகித்து வந்தார். வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ட்ரான் டாய் குவாங், சட்டப்படிப்பில் பி.எச்.டி பட்டம் பெற்றவர் ஆவார்.

இவர் கடந்த 2006 முதல் 2011 வரை மக்கள் பாதுகாப்புத்துறையின் துணை அமைச்சராகவும், அதன் பின்னர் 2011 முதல் 2016 வரை அதே துறையில் அமைச்சராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வியட்நாம் அதிபரின் மறைவு அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.