வித்தியாசமான முறையில் ஒளி ஏற்றிய இயக்குனர் ராம் கோபால் வர்மா.. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வீடியோ

 

வித்தியாசமான முறையில் ஒளி ஏற்றிய இயக்குனர் ராம் கோபால் வர்மா.. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வீடியோ

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரிப்பதைத் தடுக்க, 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து காணொளி மூலம் நாட்டு மக்களிடம்  பேசிய பிரதமர் மோடி, கொரோனா இருளை அகற்ற “ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ram gopal varma

இதை அடுத்து பொதுமக்களும், பிரபலங்களும் விளக்குகளுடன் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.  இந்நிலையில் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா நேற்று அதே 9 மணிக்கு ஒரு தான் ஒளியேற்றிய ஒரு வீடியோ வை ஷேர் செய்துள்ளார். அதில் அவர் இருட்டில் தன் முகம் தெரியும்படி,  லைட்டரை க்ளிக் செய்து சிகரெட் ஒன்றை பற்ற வைக்கிறார். இந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி தனக்கு கொரோனா நோய் இருப்பதாக கூறி பின்பு, ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் அன்று அனைவரையும் ஏமாற்ற தான் அப்படி கூறினேன் என்றும் சொல்லியிருந்தார். இந்நிலையில் தற்போது பிரதமர் ஒளியேற்றச் சொன்னதற்கு சிகெரெட்டில் பற்ற வைத்துள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.