விதவையை மணந்த இளைஞர் அடித்து கொலை: மதுரையில் பரபரப்பு!

 

விதவையை மணந்த இளைஞர் அடித்து கொலை: மதுரையில் பரபரப்பு!

உசிலம்பட்டி அருகே கணவனை இழந்த பெண்ணை காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை: உசிலம்பட்டி அருகே கணவனை இழந்த பெண்ணை காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் வளையப்பட்டியை சேர்ந்தவர் யுகேஷ்குமார் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். வளையப்பட்டியில் உள்ள பாடி வீட்டில் தங்கி அவர் கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கு கோத்தம்பட்டியை சேர்ந்த இந்திரா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திராக்கு  ஏற்கனவே திருமணமாகி அவரது கணவர் சாலை விபத்தில் இறந்துள்ளார். இதையடுத்து யுகேஷ்குமாரும் இந்திராவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமமணம்  செய்து கொண்டனர். 

இந்நிலையில் யுகேஷ் குமாரை மர்மநபர்கள் கடத்தியுள்ளனர். பின்னர் அவரை கடுமையாக தாக்கி ரத்த காயங்களுடன் அவரது வீட்டு  வாசலில் வீசியுள்ளனர். இதையடுத்து இதை கண்ட அப்பகுதி மக்கள் யுகேஷ்குமாரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால்  அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  அதே சமயம் இந்திராவும் காணாமல் போன நிலையில்  இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.