விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்: பழ.நெடுமாறன் பகீர் தகவல்!

 

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்: பழ.நெடுமாறன் பகீர் தகவல்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிராபகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிராபகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிராபகரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதை உறுதிப் படுத்தும் வகையில் பிராபகரன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட புகைப்படமும் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன், “தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக இருக்கிறார். நான் மீண்டும் மீண்டும் உறுதியாக தெரிவிக்கிறேன், தமிழின விடுதலைக்காகப் போராட பிரபாகரன் மீண்டும் வருவார்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தொலைக்காட்சி பேட்டியின் போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.