விடியோவால் விரக்தியடைந்த இயக்குனர் ராஜமௌலி -பாதுகாப்பு வளையத்துக்குள் படப்பிடிப்பும் ,படத்தொகுப்பும் 

 

விடியோவால் விரக்தியடைந்த இயக்குனர் ராஜமௌலி -பாதுகாப்பு வளையத்துக்குள் படப்பிடிப்பும் ,படத்தொகுப்பும் 

பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தனது தற்போதைய படப்பிடிப்பில் இருக்கும் படத்திலிருந்து கசியும் விடியோவால்  அதிர்ச்சியும் விரக்தியும் அடைகிறார். இந்த  இயக்குனர் சில நாட்களாக  எதிர்கொண்டுள்ள ஒரு தீராத பிரச்சினை இது. மகதீரா மற்றும் ஈகா படத்திலும் இதே போன்ற பிரச்சினைகளை அவர் எதிர்கொண்டார்.

பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தனது தற்போதைய படப்பிடிப்பில் இருக்கும் படத்திலிருந்து கசியும் விடியோவால்  அதிர்ச்சியும் விரக்தியும் அடைகிறார். இந்த  இயக்குனர் சில நாட்களாக  எதிர்கொண்டுள்ள ஒரு தீராத பிரச்சினை இது. மகதீரா மற்றும் ஈகா படத்திலும் இதே போன்ற பிரச்சினைகளை அவர் எதிர்கொண்டார். இப்போது, இந்த படத்தில் என்.டி.ஆரின் அறிமுகக் காட்சி வீடியோ கசிந்தது, அதில் கோமரம் பீமின் கதாபாத்திரத்தில்  ஒரு பழங்குடி கெட்டப்பிலிருக்கும்  ஹீரோ ஒரு காட்டு விலங்குடன் சண்டையிடுவதை பார்த்து டென்ஷன் ஆனார். இந்த வீடியோ தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது, அதைத் தடுக்க வழிதெரியாமல் விழிக்கிறார்.

rrr-vfx-shot

இந்த வீடியோ கசிவுகளால் விரக்தியடைந்த ராஜமவுலி பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளார். அதனால் ஷூட்டிங்கில்  எந்த செல்போன் அல்லது எலக்ட்ரானிக் சாதனங்களையும் அனுமதிக்கக்கூடாது என்று கடுமையான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எடிட்டிங் அறையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

rrr-movie-cast

ஆர்.ஆர்.ஆர் என்பது ஒரு கற்பனையான கதையாகும் , இதில் ராம் சரண் அல்லூரி சீதாராமராஜு மற்றும் என்.டி.ஆர் கோமரம் பீம் வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது, மார்ச் மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.ஆர்.ஆர் 10 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. மேலும் இதில் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ் மற்றும் பலர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.