விஜய் பட நாயகியை கைது செய்ய பிடிவாரன்ட்!

 

விஜய் பட நாயகியை கைது செய்ய  பிடிவாரன்ட்!

தமிழில் விஜய் நடித்த  புதிய கீதை படத்தில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை அமிஷா படேல்

பிரபல நடிகை அமிஷா படேலை  கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

தமிழில் விஜய் நடித்த  புதிய கீதை படத்தில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை அமிஷா படேல். இவர் தேசி மேஜிக் என்ற படத்தை தனது நண்பர் குணால் என்பவருடன் சேர்ந்து தயாரித்தார். இதற்காக இவர்கள் ராஞ்சியைச் சேர்ந்த தயாரிப்பாளர் அஜய்குமார் சிங்கிடமிருந்து  ரூ.2.5 கோடி கடன் வாங்கி வாங்கியுள்ளனர். வட்டியுடன் பணத்தை தருவதாக கூறிய இவர்கள் குறிப்பிட்ட தேதியில் பணத்தை கொடுக்கவில்லை. இது குறித்து சரியான விளக்கமும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Ameesha Patel

இதையடுத்து தயாரிப்பாளர் அஜய்குமார் சிங் ராஞ்சி சிவில் நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக நடிகை அமிஷா படேல் ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அமிஷா படேலுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராஞ்சி போலீஸ் , அமிஷா படேலை கைது செய்ய மும்பை விரைந்துள்ளது.

Ameesha Patel

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அமிஷா படேல்,  ‘ஒரு குறிப்பிட்ட நபர் எனது பெயரை கேவலப்படுத்தவும், பொய்யான குற்றச்சாட்டுகளால் என் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கவும் முயற்சிக்கிறார்.  இதற்கு சட்டரீதியாக பதிலளிக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.