விஜய் டிவி நிர்வாகம் ஏன் இப்படி செய்தார்கள் என தெரியவில்லை! கலங்கும் மதுமிதாவின் கணவர்!!

 

விஜய் டிவி நிர்வாகம் ஏன் இப்படி செய்தார்கள் என தெரியவில்லை! கலங்கும் மதுமிதாவின் கணவர்!!

பிக் பாஸ்  நிகழ்ச்சியின் 3வது சீசன் வெற்றிகரமாக முடிந்து விட்டது. இறுதிக் கட்டத்தை நான்கு போட்டியாளர்கள் தொட்டநிலையில் முகின் பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளார்.

பிக் பாஸ்  நிகழ்ச்சியின் 3வது சீசன் வெற்றிகரமாக முடிந்து விட்டது. இறுதிக் கட்டத்தை நான்கு போட்டியாளர்கள் தொட்டநிலையில் முகின் பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனல்சில் அனைத்துப்போட்டியாளர்களும் கலந்துகொண்ட நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சரணவன், மதுமிதா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரவில்லை. மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலைக்கு முயன்றதற்காக மதுமிதா வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மதுமிதா தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் பலரும் கலந்துகொண்ட நிலையில் மதுமிதா, சரவணனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும் மதுமிதா கணவர் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டது போல் வீடியோ இன்று சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

 

 

இதுகுறித்து விளக்கம் அளித்2ள்ள மதுமிதாவின் கணவர்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “சமீபத்தில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் பைனல்ஸ் முடிந்தது. அதில் நானும், மதுமிதாவும் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் எங்கள் குடும்பத்தினரை அவர்கள் விழாவிற்கு அனுப்பவில்லை. ஆனால் பைனல்ஸில் நான் கலந்துகொண்டது போன்ற காட்சியை விஜய் டிவி நிர்வாகம் வெளியிட்டுள்ளனர். இதனைப்பார்த்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நிறைய நண்பர்கள் நான் அதில் கலந்துகொண்டதாக நினைத்துக்கொண்டுள்ளனர். இது மிகவும் தவறான விஷயம். அவர்கள் ஏன் இப்படி செய்தார் என விஜய் டிவி நிர்வாகத்தினர் விளக்கம் தரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.