‘விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி வருவதே எங்கள் நோக்கம்’.. பிரேமலதா பேச்சு !

 

‘விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி வருவதே எங்கள் நோக்கம்’.. பிரேமலதா பேச்சு !

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தே.மு.தி.க பிரமுகர்களுக்குப் பாராட்டு  தெரிவிக்கும் விழா இன்று நடந்தது.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தே.மு.தி.க பிரமுகர்களுக்குப் பாராட்டு  தெரிவிக்கும் விழா இன்று நடந்தது. அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், “:நான் மீண்டும் வருவேன். மக்களுக்கு நன்மை செய்ய விரைவில் வருவேன்” என்று கூறினார். 

ttn

அதனைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா, ” எங்கள் திருமண நாளை உங்களுடன் கொண்டாடுவதற்காகத் தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டணி தர்மத்தை தேமுதிக மட்டுமே கடைப்பிடிக்கிறது. குட்டக் குட்ட குனியும் சாதி தேமுதிக இல்லை. நாங்களும் மீண்டு எழுவோம். 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலுக்குக் கிராமம் கிமமாகச் சுற்றுப் பயணம் மேற்கொள்வோம். தேமுதிகவுக்கு இனிமேல் வளர்பிறை தான் ,வெற்றி முகம் தான். விஜயகாந்த் மீண்டும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வார். விஜயகாந்த் மீண்டும் களமிறங்கி, வரும் 2021 ஆம் ஆண்டு பெரிய கட்சியாக முன்னேறுவோம். விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி வருவது தான் எங்கள் நோக்கம். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம். 2021 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணியாக இருக்கப் போகிறோமா அல்லது தனியாகத் தேர்தலைச் சந்திக்கப் போகிறோமா என்று விஜயகாந்த் உரிய நேரத்தில் தெரிவிப்பார்” என்று பேசினார்.